கோவை: கோவை மாவட்டம் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது  இரு பெட்ரோல் குண்டுகள் வீப்பட்டன.

இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது. பெட்ரோல் குண்டுவீசி, தப்பியோடிய மர்மநபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடிவருகின்றனர். பெட்ரோல் குண்டு வீசப்படும் சிசிடிவி காட்சிகளை கொண்டு  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பத்தூரில் பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.