சதீஷ்குமார்

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்  சதீஷ் குமார்(33)  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  
சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் சதீஷ் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். நள்ளிரவு 1.45 மணியளவில் எஸ்.ஐ சதீஷ் தற்கொலை செய்து கொண்டதாக  கூறப்படுகிறது.

தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், மூன்று செல்போன் எண்களையும் ஒரு தாளில் சதீஷ்எழுதி வைத்திருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் முழுதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

இதைக் கொண்டு  காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அயனாவரம் காவல் நிலையத்தில் இரவுப் பணியிலிருந்த காவலர்களிடமும் அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.

2011ஆம் வருடம் நேரடி எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்ட சதீஷ் குமார், கும்பகோணத்தைச் சேர்ந்தவர். அயனாவரத்தில் ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்டவர் என்று பாராட்டு பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது