சென்னை:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நேற்று விசாரணை நடத்தினர்.

6 மணி நேரம் விசாரணைக்கு பின்னர் சசிகலா செய்தியாளர்களிடம் பேசுகையில், விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்துள்ளேன். எத்தனை கேள்விகள் கேட்டார்கள் என சொல்ல முடியாது. விசாரணை நிறைவடைந்த பின் விரிவாக பேசுகிறேன் என்றார்.

சசிகலாவிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக நேற்று விசாரணை நடைபெற்ற நிலையில் இன்றும் விசாரணை நடத்தப்பட உள்ளது.