சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த காவல்துறைக்கு தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 27ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

கொடநாடு கொலை கொள்ளைவிவரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. குற்றவாளிகள் சமீபத்தில் கொடுத்த வாக்குமூலத்தின்படி, இந்த கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி உள்பட பலரது பெயர்கள் அடிபடுகின்றன.

இந்த நிலையில்,  இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்டது,  குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு மீண்டும் விசாரணைக்கு தடை வித்திக்க கோரி, கோயம்புத்தூரை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உய்ரநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தற்போது மீண்டும் நடத்தப்படும் இந்த விசாரணையால், தனக்கு சில நபர்களால்  பாதிப்பு ஏற்படுவதாகவும், ,காவல்துறைக்கு ஏற்றவாறு சாட்சி சொல்ல தன்னை கட்டாயப்படுத்துவதாகவும் குறிப்பிட்டு உள்ளதுடன்,  எனவே,இந்த விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நீலகிரி நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை   நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், கொடநாடு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகு காவல்துறை நீதிமன்றத்தில் அனுமதி பெற்று விரிவான விசாரணை நடத்த வேண்டும், ஆனால், இதை செய்யாமல் மனுவை மட்டும் தாக்கல் செய்து விட்டு விரிவான விசாரணையை காவல்துறை நடத்துகிறார்கள். இது சட்டத்திற்கு முரணானது”,என்று தெரிவித்தார். மேலும், தனது கட்சிக்காரர்,  சாட்சியம் என்ற அடிப்படையில்தான் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்  என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு காவல்துறை மற்றும் தமிழக அரசு தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர்.  இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி,”இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்களின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்”, என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை வருகின்ற 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.