மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி.

அதன்பின் தற்போது தனது புதிய படத்துக்கான கதை, திரைக்கதையை முடித்துத் தயாராகிவிட்டார் கிருத்திகா உதயநிதி.

இந்தப் படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள், தயாரிப்பாளர் யார் என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.