டில்லி’

மோடியின் அரசு பயத்தில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

இன்று டில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களிடம்,

“ஸ்டேட் வங்கிக்குத் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை வெளியிடுவதற்கு நான்கு மாத கால தாமதம் ஏன்? மோடியின் அரசு தேர்தல் பத்திரம் குறித்து வெளியிட்டால் யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நிதி அளித்தார்கள் என்ற உண்மை வெளியே வந்து விடும் என்கிற பயத்தில் உள்ளது. 

பாஜக நாட்டின் அரசியல் சாசனத்தை முழுவதுமாக பா.ஜ.க ஏற்கவில்லை.  எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். மோடியின் அரசு கருத்துச் சுதந்திர செயல்கள் முழுவதையும் அரசு ஏற்க மறுக்கிறது. 

மோடியின் அரசு அம்பேத்கர் பற்றிப் பேசிக்கொண்டு சமூகநீதி கொள்கைகள் எதையும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது  மக்களவைத் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டு நடைபெறும் பட்சத்தில் 100% வெளிப்படைத் தன்மையை அரசு உறுதி செய்யவேண்டும்”. 

என்று கூறினார்.