சென்னை,

திமுகவின் 15வது அமைப்பு தேர்தலையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, தானும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மீண்டும் தன்னை உறுப்பினராக  புதுப்பித்து கொண்டார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் 15வது அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, மாவட்டம்தோறும் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் சுமார் 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, திமுகவினர் வீடுவீடாக சென்றும், முகாம் அமைத்து புதிய உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

அதிமுக மட்டுமல்லாமல், பல்வேறு கட்சிகளில் இருந்தும் திமுகவில் சேருகிறார்கள். திமுக உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடியாக உயர்த்த திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியும் உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொண்டுள்ளார்.