சுஷாந்த் சிங் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலி ரியா சக்ரபார்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலிவுட்டை தொடர்ந்து கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

அதையடுத்து நடிகை சஞ்சனா கல்ராணி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் நடிகை சஞ்சனா கல்ராணி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்னும் நிபந்தனையுடன் நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.