கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மே மாதம் 10 ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 20 ம் தேதி இதற்கான வேட்புமனு தாக்கல் துவங்கும் என்றும் வேட்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 24 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடைபெறும் என்றும் மே 15 ம் தேதி தேர்தல் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.