பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகளை மீறி கடந்த சில வாரங்களாக கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

மும்பை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கரீனா மற்றும் அம்ரிதா-வுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தியுள்ளது.