சென்னை,

காவிரி தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி பல விஷயங்களில் ரஜினி மவுனம் காத்து வருகிறார் என்று கமல் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரஜினிகாந்த் காவிரி விவகாரம் மட்டுமல்ல பல்வேறு விஷயங்களில் அப்படிதான் மவுனமாக இருக்கிறார். அதனால் நாம் ஒரு தலைப்பை மட்டம் சுட்டிக்காட்டி அதைப் பற்றி பேச முடியாது,” என்றார்.

திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எட்டி உதைத்து கர்ப்பிணி பலியான விவகாரத்திற்கு ரஜினி கருத்து தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கமல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.