கள்ளக்குறிச்சி:

மிழகத்தின்  34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் இன்று உதயமானது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அமையும் என கடந்த ஜனவரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதன்படி, இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது. இந்த மாவட்டத்தின் கீழ், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 தாலுக்காக்கள் இணைக்கப்பட்டு உள்ளது.

புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டத்தின் நிர்வாகப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். மேலும் பல்வேறு  திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள், பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.