சென்னை: சென்னையின் அடையாளமாக விளங்கும் கலாஷேத்ரா வின் வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த பாடகர் டி.எம். கிருஷ்ணாவின் சமீபத்திய புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்வை கலாஷேத்ராவின் அறக்கட்டளை ரத்து செய்தது. அதற்கான காரணமாக, “அரசியல், கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையைத் தூண்டக்கூடும்“, என்று கூறப்பட்டுள்ளது.

கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குநர், ரேவதி ராமச்சந்திரன் ஒரு கடிதத்தில், கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பான இந்த நிறுவனம் இதன் வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடப்பதை அனுமதிக்க முடியாது என்றும் இந்நிகழ்விற்காக வளாகம் முன்பதிவு செய்யப்பட்ட போது அந்தப் புத்தகம் குறித்த சர்ச்சைகளை அறிந்திருக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இசைக்கலைஞர், எழுத்தாளர், பேச்சாளர் மற்றும் மகசேசே விருது பெற்றவரான டி.எம். கிருஷ்ணாவின் சமீபத்திய புத்தகம், மிகவும் புறக்கணிக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பேசப்படாத கலைஞர்கள் பல தலைமுறைகளாக மிருதங்கம் என்றழைக்கப்படும் தாளக்கருவியைக் கைவினைக் கலையாக வடிவமைத்ததைப் பற்றிய விவரங்களை உள்ளடக்கியுள்ளது.

இது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிகுமார் கூறுகையில், “கலாஷேத்ரா இதைச் செய்திருப்பது கொடுமையானது. அறக்கட்டளையின் முக்கியமான பணியே கலாச்சாரம் மற்றும் கலையை மேம்படுத்துவதாகும். இந்தப் புத்தகம் தலித் சமூகத்தைச் சேர்ந்த மிருதங்கம் தயாரிப்பாளர்கள் மற்றும் இந்தக் கலைக்கு அவர்களின் பங்களிப்பு பற்றியது. டி.எம். கிருஷ்ணா அதை அங்கீகரித்திருக்கிறார்.“

அவர் மேலும், “இது போன்ற ஒரு புத்தகம் அரசியல், கலாச்சார மற்றும் சமூக ஒற்றுமையை எவ்வாறு தூண்டும் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிகழ்வை ரத்து செய்வதன் மூலம் கலாஷேத்ரா தன்னையும், தன் இனவாத நிறத்தையும வெளிப்படுத்தியுள்ளது“, என்று கூறினார்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவின் முதன்மை விருந்தினர் வி.சி.கே தலைவர் தொல். திருமாவளவன் ஆவார்.