கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் கஜோல்.

1997 ஆம் வருடம் வந்த மின்சாரக்கனவு படத்துக்கு பின் தற்போது மீண்டும் விஐபி 2 படத்தில் கஜோல் நடிக்கிறார்.  அவர் தமிழில் நடிக்காத காரணம்  மொழியை புரிந்துக் கொள்ள கஷ்டப்பட்டது தான் எனக் கூறுகிறார்

”மின்சாரக் கனவு படத்தில் நடிக்கும் போது நான் என் உதவியாளருடன் டயலாக் பேப்பரை இரவு 2 மணி வரைக்கும் படித்துப்பார்ப்பேன்.  பள்ளி நாட்களில் கூட இப்படி நான் படித்ததில்லை.  அதனால் தான் நான் பிற மொழிப் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.

ஆனால் தனுஷ் என்னிடம் எனது வசனங்களில் 50% இங்கிலீஷ் என பொய் சொல்லி நடிக்க வைத்து விட்டார்.  அதைப் பொய்னு சொல்ல மாட்டேன்.  அவருக்கு கணக்கு சரியாக வந்திருக்காது.” என நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ”நான் மீண்டும் தமிழில் நடிப்பதற்கு கிடைத்த வரவேற்பை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.  இப்போதும் நான் வசனம் சரியாக பேசுவேனா என்ற பயம் ஆரம்பத்தில் இருக்கத்தான் செய்தது” என்றார்.