சென்னை:

சிரியர் தேர்வு வாரியம் சார்பில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம்  8 மற்றும் 9ந்தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த தேர்வை  இடைநிலை ஆசிரியர்  பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.

தமிழக அரசு இந்த ஆண்டுக்கான  டெட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது, டெட் விண்ணப்பிக்க கடந்த 5ந்தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒரு வாரம் நீட்டித்து ஏப்ரல்  12ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. டெட் தேர்வுக்கு இதுவரை சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஜூன் மாதம் 8ந்தேதி மற்றும் 9ந்தேதிகளில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.