சென்னை: தமிழ்நாட்டில் “பத்திரிக்கையாளர் நல வாரியம்” அமைத்து  தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது.

தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது,  “தமிழ்நாட்டில் முதன்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக  முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார். அதனடிப்படையில் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில்,   “பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும்” என்ற அறிவிப்பினை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார்.

இதையடுத்து, தற்போது  “பத்திரிகையாளர் நல வாரியம்” ஒன்றை உருவாக்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.