சென்னை:

சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் குஜராத்தில் கைது செய்யப்பட்டார்.


சென்னை கொளத்தூர் நகைகடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நாதுராமை போலீசார் தேடி வந்தனர். இதற்காக ராஜஸ்தான் சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் நாதுராம் தலைமறைவானார்.

அவரை தமிழகம் மற்றும் ராஜஸ்தான் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில போலீசார் நாதுராமை குஜராத்தில் கைது செய்துள்ளனர்.