2009 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பழசிராஜா’ படத்தில் பாடியதோடு, பாடுவதை நிறுத்திய கே.ஜே.ஜேசுதாஸ், தற்போது இளையராஜாவுக்காக ‘தமிழரசன்’ படத்தில் ஜெயராம் எழுதிய ”பொறுத்தது போதும்…பொங்கிட வேணும்….புயலென வா…”என்ற புரட்சிகரமான பாடலை பாடியிருக்கிறார்.

எஸ்.என்.எஸ்.மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கிறார்.ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடிக்க, வில்லியாக சங்கீதா நடிக்கிறார்.

இவர்களுடன் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட், யோகிபாபு, கஸ்தூரி ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமிநாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மன மாஸ்டர் பிரணவ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.