சென்னை,
மிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்பீக்கர் உதவியுடன் பேசுகிறார் என்று அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘ட்ராக்யோஸ்டமி’ செய்யப்பட்டிருப்பதால், சிறிய ஸ்பீக்கர் உதவியுடன் பேசுவதாக அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்திருக்கிறார்.
jeya
சென்னை பெருங்குடியில்   இன்று நடைபெற்ற உறுப்பு தானம் வழங்கியவர்களை கவுரவிக்கும்  விழா ஒன்றில் பேசிய அப்பல்லோ குழும தலைவர்  பிரதாப் ரெட்டி முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பேசினார்.
அப்போது, முதல்வருக்கு கழுத்தில் “ட்ராக்யோஸ்டமி” அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் பொதுவாகப் பேச முடியாது. ஆனால், ஜெயலலிதா பேசுவதற்கு வசதியாக  சிறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் பேசுவது எளிதல்ல. மூச்சைப் பிடித்துக் கொண்டு பேசவேண்டும். சில நொடிகளோ, நிமிடங்களோ அப்படிப் பேசுகிறார்” என்று கூறியிருக்கிறார். மேலும் முதல்வர் தற்போது முழு குணம் அடைந்துவிட்டார் என்றும், அவருக்கு உடல் முழுவதும் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

ட்ராக்யோஸ்டமி சிகிச்சை முறை
ட்ராக்யோஸ்டமி சிகிச்சை முறை

மேலும் அவர் விரும்பும்போது வீடு திரும்பலாம் என்றும் கூறினார்.
கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.  காய்ச்சல் காரணமாகவும் நீர்ச்சத்து குறைவின் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாக  முதலில் தெரிவிக்கப்பட்டது.
அப்பல்லோ டாக்டர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் உடனடியாக குணப்படுத்தப் பட்டாலும், சளி, மூச்சு திணறல், நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால், தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீலே சென்னை வந்து சிகிச்சை அளித்தார். மேலும் டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் அப்பல்லோ மருத்துவ குழுவினருடன்  இணைந்து சிகிச்சை அளித்தனர்.
ட்ராக்யோஸ்டமி சிசையை காட்டும் மாதிரி படம்
ட்ராக்யோஸ்டமி சிகிச்சை மாதிரி படம்

ஆரம்பத்தில் முதல்வரின் உடல்நிலை குறித்து,  அவ்வப்போது அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
கடந்த இரண்டு முறையாக அப்பல்லோ தலைவர் முதல்வர் குறித்த தகவல்களை பத்திரிகைகளுக்கு தெரிவித்து வருகிறார். அதிமுகவும் செய்தியாளர்களிடம் முதல்வர் உடல்நிலை குறித்து விளக்கம் அளித்து வருகிறது.
இதற்கிடையில் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட பிறகு, முதல் வர் குறித்து பிரதாப்ரெட்டி இன்று புதிய தகவலை தெரிவித்தி ருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு தொண்டையில் குழாயைப் பொருத்தும் “ட்ராக்யோஸ்டமி” சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
மேலும் முதல்வர் தற்போது பூரண குணம் அடைந்துவிட்டார், எழுந்து நடக்க வேண்டியதுதான் பாக்கி’ என்றார். அதற்கு தேவையான இயன்முறை சிகிச்சை தற்போது வழங்கப்பட்டு வருவதாகவும் உடற்பயிற்சிகளைச் செய்ய அவர் ஊக்குவிக்கப்பட்டுவருவதாகவும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
அதன் பிறகு அவர் எழுந்து  நடக்கும்போது வீடு திரும்பலாம் என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
முதல்வர் தனி அறைக்கு மாற்றப்பட்டதினால், அவர்  விரைவில் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும் என்றும் அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறதென்றும் என்றும் கூறினார்.  பல பிரச்சனைகளுடன் இருந்த அவரது உடல் உறுப்புகள் தற்போது சரியாக இயங்குவதாகவும்  கூறினார்.