சென்னை:

ஜெ.மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மாநில தலைமை தகவல் ஆணையர் ஷீலா பிரியா ஆஜர் ஆனார். இவர், ஏற்கனவே  ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக பணியாற்றியவர்.

தமிழக அரசு அமைத்துள்ள  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும்,  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி  விசாரணை ஆணையத்தில்  ஜெயலலிதாவுக்கு வேண்டியவர்கள், அவரது தோழி சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள் என பலரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இன்றைய விசாரணைக்கு ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக இருந்த ஷீலா பிரியா ஆஜராகி உள்ளார். இவர் தற்போது  மாநில தலைமை தகவல் ஆணையராக பணியாற்றி வருகிறார்.