பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற  ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரன் இன்று சிறையில் இருந்து விடுதலையானார். நீதிமன்றம் அறிவித்த அபராதத்தை செலுத்தாததால்,கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த நிலையில்  89 நாட்களுக்கு முன்னதாகவே இன்று  விடுதலை செய்யப்பட்டார்.

வருமானத்தை முறி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்ப்பை தொடர்ந்து,  ஜெயலலிதா தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி  அடைக்கப்பட்டனர்.

இவர்களின் தண்டனை காலம் 2021ம் ஆண்டு ஜனவரியில் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற அறிவித்த அபராதத்தை கட்டிவிட்டு, சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகினர்.கடந்த ஜனவரி மாதம் 27-ந்தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து 2 விடுதலை செய்யப்பட்டனர். அதே வேளையில் சுதாகரனுக்கு அபராதத் தொகையை கட்ட, மன்னார்குடி குடும்பத்தினரும், சிவாஜி குடும்பத்தினரும் முன்வரவில்லை. இதனால், அவர் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை  அனுபவித்து வந்தார்.

அதையடுத்து, அவர் ஏற்கனவே அனுபவித்த சிறை மற்றும் விடுமுறை நாட்களை கணக்கில்கொண்டு, அவரை விடுதலை செய்ய நிதிமன்றம் உத்தரவிட்டடிருந்தது. அதன்படி 89 நாட்களுக்கு முன்னதாகவே  சுதாகரன் தண்டனை காலம் இன்று  பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையானார்.