தஞ்சாவூர்:
ஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போட்டியிடுகிறார். இவர் பாபநாசத்தில் தங்கி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி, சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்ட பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் சென்றுள்ளார்.

அன்றைய தினம் அவருக்கு முழங்காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 29-ம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது உதவியாளரிடம் கேட்டபோது, பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு கடந்தாண்டு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந்நிலையில் பாபநாசம் தொகுதியில் இடைவிடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், காலில் வலி வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் ஆலோசனையின்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றார்.