நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் தெரிவிக்கையில், அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய்ப் பாதிப்பு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதாக நோய்ப் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையானர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.