இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேசிய தேர்வுக் குழு சேர்த்துள்ளது.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக செப்டம்பர் 2022 முதல் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகி இருக்கும் பும்ரா ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்தும் விலகினார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியால் (NCA) நடத்திய புத்துணர்ச்சி முகாமில் கலந்துகொண்ட பும்ரா தற்போது முழு உடல் தகுதி பெற்றுள்ளார். விரைவில் டீம் இந்தியா ஒருநாள் அணியில் இணைவார் என பிசிசிஐ செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒருநாள் போட்டிகளுக்கான புதிய இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.