டெல்லி: இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் மோடி தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார்.  திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக  கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி 15ந்தேதி, உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் வகையில் திருவள்ளுவர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால்  கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்கு அஞ்சலி செலுத்துவதாக தமிழில் டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,  ‘திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை மற்றும் அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்’ என்று கூறி அந்த காணொலியையும் பகிர்ந்துள்ளார்.