திருப்பூர்:

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் போரட்டக்காரர்கள், காவல்துறையினர் கடுமையான தடியடி நடித்தி கலைத்த சம்பவங்களும் நடந்தன.

இந்த நிலையில், காவலர் ஒருவரை காளை விரட்டிய சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பஜார் அருகே மெயின்ரோட்டில் நின்றுகொண்டிருந்த காளையை விரட்ட முயன்றார் டிராபிக் காவலர் ஒருவர். ஆத்திரமான காளை அவரை விரட்ட தொடங்கியது. பயந்துபோன காவலர், காளையிடம் இருந்து தப்பிக்க ரோட்டில் காவலர் ஓட… அவரை விடாமல் காளை துரத்தியது. ஒரு கட்டத்தில் காவலர் கீழே விழுந்துவிட்டார். அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றினர்.

நடு சாலையில், காவலரை காளை விரட்டிய சம்பவம், திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.