டில்லி

ம்தா பானர்ஜி 15 நிமிடங்களாவது ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். நாட்டு மக்களுக்கு பாஜகவிடம் இருந்து நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14 ஆம் தேதியன்று தொடங்கிய இந்த பயணமானது மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது.

நடைப்பயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படும் இந்த யாத்திரை தற்போது ராகுல்காந்தியின் யாத்திரை நாகாலாந்து, அசாமைக் கடந்து மேற்கு வங்காளத்துக்குள் நுழைந்துள்ளது.

இன்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்,

” இந்தியா கூட்டணியின் முக்கிய தூணாக உள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, நாட்டின் துணிச்சல் மற்றும் அனுபவம் மிக்க தலைவர் ஆவார்.

நான் மம்தா பானர்ஜி பாஜகவைத் தோற்கடிக்க விரும்புகிறார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இதை போல் நாங்களும் பாஜகவை தோற்கடிக்க விரும்புகிறோம். எனவே நாம் இணைந்தே போரிட்டு”இந்தியா” கூட்டணியை வெற்றி பெறச் செய்வோ,

மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட அனைவரும் விரும்புகின்றனர்.

மேலும் மம்தா பானர்ஜிக்கு இதில் கலந்துகொள்ளுமாறு அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளது. மம்தா ராகுலின் இந்தப் பயணத்தில் ஒரு 15 நிமிடங்களாவது கலந்துகொள்ள வேண்டும். மம்தாவின் பங்கேற்பு இந்த யாத்திரைக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.”

என்று கூறி உள்ளார்.