சென்னை:
மிழகத்தின் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கமான ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப் பாளர் க.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக  க.மீனாட்சி   சுந்தரம் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில்  சமீபத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மீனாட்சி சுந்தரம் இன்று காலமானார்.
இவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றபொதுச் செயலாளராக இருந்துள்ளார். மேலும் தமிழ்நாடு சட்டமன்ற மேலவையில் ஆசிரியர் சங்க பிரதிநிதியாக இருந்தவர்   என்பது குறிப்பிடத்தக்கது.