சென்னை,

மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

தற்போது ஓஎம்ஆர் எனப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சோழிங்க நல்லூரில் எச்.சி.எல் கம்பெனி ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அவர்கள் வரிசையாக கைகோர்ட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் அடுத்தடுத்து உள்ள ஐ.டி. கம்பெனி ஊழியர்கள் இணைந்து வருகிறார்கள். இன்னும் ஒருசில மணி நேரத்திற்குள்   ஓஎம்ஆர் சாலை முழுவதும் ஐடி கம்பெனி ஊழியர்களின் மனித சங்கிலி போராட்டத்தால் களைகட்டும் என  நம்பப்படுகிறது.

இதன் காரணமாக அங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.