சென்னை,

மிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராடும் மாணவர்களுக்கு இலவசமாக சட்ட உதவி செய்யப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் சங்கம் அறிவித்து உள்ளது.

பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் அச்சுறுத்தியும், வழக்கு பதிவு செய்தும் மிரட்டி வருகின்றனர்.

இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது.