கோவை: முன்னாள் எஸ்.பி.வேலுமணியின் நண்பருக்கு சொந்தமான, கோவை  கே.சி.பி நிறுவனத்தில் 4-வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் சந்திரசேகர் வீடு மற்றும் சகோதரர், சகோதரிகள் வீடு உள்பட 6இடங்களிலும் கடந்த 6ந்தேதி வருமான வரித்துறை, லஞ்ச ஒழிப்பு காவல்துறை இணைந்து சோதனை நடைபெற்றது. கோவை வடவள்ளியை சேர்ந்த என்ஜினீயர் சந்திரசேகர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார்.  இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் லேப் டாப்பை போலீசார் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கோவை பீளமேட்டில் கே.சி.பி. நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக சந்திரபிரகாஷ் உள்ளார். அவரது நிறுவனத்தில் நேற்று 3வது நாளாக கே.சி.பி.நிறுவனம், ஆலயம் அறக்கட்டளையிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் இன்று 4-வது நாளாக பீளமேட்டில் உள்ள கே.சி.பி. நிறுவனம் மற்றும் கொடிசியா அருகே உள்ள சந்திபிரகாஷ் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.