ஸ்ரீஹரிகோட்டோ: புத்தாண்டின் முதல் நாளான  ஜனவரி 1ம் தேதி இஸ்ரோவில் பணியாற்றும் பெண் விஞ்ஞானிகளின் மேற்பார்வையில் உருவான  பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட்டை விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி சி 58 என்ற ராக்கெட்டை புத்தாண்டு அன்று அதாவது ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில்  செலுத்த தயாராக உள்ளது.  இது  ஜனவரி 1ந்தேதி  காலை 9.10 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த விண்கலமான விண்ணில், அதாவது, பூமியில் இருந்து சுமார் 500 முதல் 700 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கை கோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது.  இதில் உள்ள  எக்ஸ்ரே மூலங்களின் மூலம், தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளை வாயுக்களின் மேகக்கூட்டமான ‘ நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆராய ஏதுவாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கைகோளை  திருவனந்தபுரத்தை சேர்ந்த லால்பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்டுயூட் ஆப் டெக்னாலஜி மாணவிகள் ‘வேசாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளனர். இது, விண்வெளி மற்றும் பூமியின் மேற்பரப்பில் உள்ள புறஊதா கதிர்கள் மற்றும் கேரளாவில் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளில் அவற்றின் தாக்கத்தை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெண்கள் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற பெருமை இந்த வெசாட் செயற்கைக்கோள் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இத்துடன் 10 வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களும் இந்த பி.எஸ்.எல்.வி சி 58 ராக்கெட் சுமந்து செல்கிறது. மொத்தம் 12 செயற்கைக்கோள்களை சுமந்து வரும் 1 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் நாளை அதாவது டிசம்பர் 31 ஆம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

அத்துடன்,  ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 10,000 பேர் அமர்ந்து பார்வையிடும் வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டு உள்ளது. நேரில் செல்ல விரும்பும் பார்வையாளர்கள் https://lvg.shar.gov.in என்ற இணையதள முகவரியில் பெயர்களை முன்பதிவு செய்து, அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.