மேட்டூர்

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீர் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இந்த ஆண்டு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. ஆயினும் அணையில் இருந்து பாசன தேவைக்காகக் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

அதே வேளையில் மழையளவு குறைந்த நிலையில், அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, காவேரி பாசன விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.   குருவை சாகுபடிக்காக அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு  வந்தது.

இப்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.