சென்னை:  நடப்பு ஆண்டு நடைபெற உள்ள  ஐ.பி.எல் தொடரின் 14 வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த ஏலப் பட்டியலில் 164 இந்திய வீர‌ர்கள், 125 வெளிநாட்டு வீர‌ர்கள் உட்பட மொத்தம் 292 வீரர்கள்  பங்கேற்கின்றனர்.

முன்னதாக ஐபிஎல்  ஏலத்தில் கலந்துகொள்ள   1,097  வீரர்கள்  பதிவு செய்தனர்.  இந்தியாவைச் சோந்த 743 பர் , வெளிநாடுகளைச் சோந்த 68 போ என சா்வதேசப் போட்டிகளில் விளையாடாத 286 போ ஏலப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனா். அவர்களில் இருந்து 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏலத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

மேற்கிந்திய தீவுகளில் இருந்து அதிகபட்சமாக 56 பேரும், அதற்கடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் இருந்து 42 பேரும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 38 பேரும் இந்தியர்கள் 164 பேரும் பங்கேற்கின்றனர். ஏலத்துக்கு தேர்வாகி உள்ள வீரர்களின் பட்டியலில், 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில்,  ஷாருக்கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த் உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் தேர்வாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 25 வீரா்களை தோவு செய்யலாம். வீரர்களுக்கான ஏலம் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.