சென்னை: 
நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீர் நிலை ஆக்கிரமிப்புகளைக் கணக்கெடுப்பு செய்து வரும் நான்காம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், எவ்வித சுணக்கமும் காட்டாமல் கணக்கெடுப்பு நடத்தி, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.