பெரியகுளம்

மிழகத்தில் பெரியகுளம் வட்டத்தில் இறந்தே பிறந்ததாகக் கூறப்பட்ட குழந்தை அடக்கம் செய்யும், போது உயிருடன் இருந்தது தெரிய வந்தது.

தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் பெரிய குளம் வட்டத்தில் உள்ள தாமரைக்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா என்பவர் ஆவார்.  இவருடைய மனைவியான பாத்திமா மேரி பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு குழந்தை இறந்தே  பிறந்ததாகத் தெரிவித்து குழந்தை கொடுக்கப்பட்டுள்ளது.  அதிர்ச்சியும் சோகமும் அடைந்த பாத்திமா மேரியின் குடும்பத்தினர் குழந்தையை அடக்கம் செய்யக் கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்  அடக்கம் செய்யும் போது திடீரென அசைந்த குழந்தையைப் பார்த்த போது குழந்தை உயிருடன் உள்ளது தெரிய வந்துள்ளது.

 இதையொட்டி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   அதே மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்றுள்ளனர்   அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்படுகிறது.