லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் பெரிய வெற்றியைப் பதிவுசெய்துள்ளது இந்திய பெண்கள் அணி.

இதன்மூலம், ஏற்கனவே தொடரை இழந்தாலும், ஒயிட்வாஷ் ஆகாமல், ஆறுதல் வெற்றியை ஈட்டியுள்ளது அந்த அணி.

வெற்றிக்கு தேவை, 20 ஓவர்களில் வெறும் 113 ரன்கள்தான் என்ற நிலையில், துவக்க வீராங்கனைகள் ஷபாலி மற்றும் மந்தனாவின் ஆட்டம் வேறுமாதிரியாக இருந்தது.

30 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த ஷபாலி ஆட்டமிழந்தவுடன், 10 விக்கெட்டுகளில் வெல்லும் வாய்ப்பை இழந்தது அந்த அணி. மந்தனா 28 பந்துகளில் 48 ரன்கள‍ை அடிக்க, ஹர்லீன் தியோல் 4 ரன்கள் எடுத்தபோது, இந்திய அணி 114 ரன்கள‍ை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டியது.