ஆண்டிகுவா: விண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி, விண்டீஸ் அணியைவிட 153 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில், இலங்கை அணி 169 ரன்களை எடுக்க, விண்டீஸ் அணி 271 ரன்களை அடித்து, 102 ரன்கள் முன்னிலைப் பெற்றது. அந்த அணியின் கார்ன்வால் 61 ரன்கள் அடிக்க, கேம்ப்பெல் 42 ரன்கள், மேயர்ஸ் 45 ரன்கள் மற்றும் டா சில்வா 46 ரன்கள் அடித்தனர்.

பின்னர், 102 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இலங்கையின் துவக்க வீரர் திரிமனே 76 ரன்களையும், பெர்னான்டோ 91 ரன்களையும் விளாசினர். டா சில்வா 46 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இதனையடுத்து, 3ம் நாள் ஆட்டநேர முடிவில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 255 ரன்களை எடுத்து 153 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது இலங்கை அணி. இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால், இப்போட்டியில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.