லாலா, ஓமன்

நான்காம் முறையாக இந்திய ஆக்கி அணி ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.

ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் 10-வது ஜூனியர் ஆசியக் கோப்பை ஆக்கி போட்டி நடைபெற்றது.  இதில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது.

இந்திய அணி போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கி 13வது நிமிடத்தில் அங்கட் பீர் சிங் ஒரு கோல் அடித்தார். பிறகு ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் அரிஜித் சிங் ஹுண்டால் ஒரு கோல் அடித்தார்.

அதைப் போல் பாகிஸ்தான் தரப்பில் ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் அப்துல் பஷாரத் ஒரு கோல் அடித்தார்.   வேறு கோல் எதுவும் பாகிஸ்தான் அடிக்கவில்லை.

எனவே இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற இந்தியா 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஏற்கனவே 2004, 2008 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.