சென்னை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைப்பயணம் நடத்த உள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கிலோமீட்டர் நடைப்பயணம் செய்வதென்று முடிவு செய்து இருக்கிறோம் என்று கூறினார்.