சென்னை:
டுக்குமாடி குடியிருப்பில் கொரோனா பரவல் அதிகரிப்பு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று கொரோனா பாதிப்பு 2,089 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,77,279 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில். இன்று கொரோனா பாதிப்பு 2,089 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,77,279 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 775 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4785 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 300 படுக்கைகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தஞ்சையில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.