சென்னை: இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பிரபல கிறி1தவ பால் தினகரன் அவர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இன்று 2வது நாளாக சோதனைகள் தொடர்ந்து வருகிறது.

முதல்நாள் சோதனையிலேயே  பலகோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் ஊழியம் நடத்தி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்து வருகிறார் பால் தினகரன். இவர் முறையாக வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், வெளிநாடு மூலம் வந்த பணத்தை கணக்கு காட்டவில்லை என்றும்  கூறப்படுகிறது.

‘இது தொடரபான  புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான  சென்னை உள்பட வீடு உள்பட 28 இடங்களில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இன்று இரண்டாவது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. சுமார் 200 ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் பலஆயிரம் கோடி மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.