கோயமுத்தூர்: கோவை ஆனந்தாஸ் உணவக குடும்பத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையின் பிரபலமான ஓட்டல்களான ஆனந்தாஸ் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை 6மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில், ஆனந்தாஸ் குழுமத்தின் நிறுவனர் மணிகண்டனின் இல்லம் மற்றும் அவருக்கு சொந்த பல இடங்கள் என மொத்தம் 40 இடங்களில்   வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   மொத்தமாக 40 குழுக்களாக பிரிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், சோதனை முடிவில்தான் என்னென்ன கைப்பற்றப்பட்டு உள்ளது என்பது குறித்து தெரிய வரும்