சென்னை

டுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் சென்னையில் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.  இதில் அதிகபட்சமாக எம் ஆர் சி நகரில் 8.2 செமீ மழை பெய்துள்ளது.  அடுத்ததாக தரமணி * 7.5 செமீ, பெருங்குடி – 7.3 செமீ, அண்ணாநகர் 7.3 செமீ, நந்தனத்தில் 6.6 செமீ மழை பெய்துள்ளது.  தவிர மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், அம்பத்தூர், பெருங்குடி, நந்தனம், செண்டிரல், கிண்டி பகுதிகளிலும் மழை தொடர்கிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

தவிர திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்க்கப்ப்டுள்ளது.   புறநகர பகுதிகளான பல்லாவரம், அனகாபுத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் பெய்து வரும் மழை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.