சென்னை

டுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய. இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதாவது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.