சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

“தற்போது லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது.

இதனால் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது  செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். 

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்” 

என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.