ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் மீட்கப்பட்டு வரும் மணப்பாறை பகுதியில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு 610 அடி ஆழம் உள்ள ஆழ்துளை கிணற்றில் 2 வயது சிறுவனர் சுர்ஜித் விழுந்தான். கடந்த 4 நாட்களாக பல்வேறு வழிகளில் மீட்பு பணிகள் நடந்தும், தொடர்ந்து சுர்ஜித் மீட்பு பணியில் சிக்கல் நீட்டித்து வருகிறது. அதேநேரம் நேற்றைய மீட்பு பணியின் போது, அவ்வப்போது மழை குறுக்கிட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றும் நடுக்காட்டுப்பட்டி பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அரசு வருவாய்துறை செயலாளருக்கு வானிலை ஆய்வு மையம் தரப்பிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணியை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.