26 நாடுகளிலிருந்து 106 திரைப்படங்கள் கலந்துகொண்ட Innovative Film Acadamy ( IFA) சார்பில் பெங்களூரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் ” நெடுநல்வாடை ” திரைப்படம் விருதை பெற்றுள்ளது .

பூராமு, இளங்கோ, அஞ்சலி நாயர் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கத்தில் கடந்த மார்ச் 15 ஆம் தேதி வெளியாகி ” நெடுநல்வாடை ” மாபெரும் வெற்றி பெற்றதோடு அனைவராலும் பாராட்டப்பட்டது.

விருது கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குனர் செல்வக்கண்ணன் , தமிழ் சினிமா துறையில் உருவான முதல் CROWD FUNDING திரைப்படம் இது. இந்த நேரத்தில் என்னுடைய தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், படத்தை தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என பேசினார்.