சென்னை

ரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள்  நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம்  எனக் கூறப்படுகிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது  இந்நிலையில், தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தனது கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுக  தலைமை தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம் பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் நீதி மய்யம். திமுக கூட்டணியில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை அல்லது தென் சென்னை தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் நாளை,அல்லது நாளை மறுநாள் சென்னை, கோவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.