பிரபல நடிகையான  தமன்னா முத்தக்காட்சிகளின் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையை கடை பிடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது தான் முத்தக்காட்சிகளில் நடிக்க தயார், ஆனால் அந்த காட்சிகளில் நடிப்பது பாலிவுட்நடிகர் ஹிரித்திக் ரோஷனாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 13 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருபவர் தமன்னா. இடையில் சில காலங்கள் பட வாய்ப்பு இல்லாத நிலையில், கடந்த 2018ம் ஆண்டு முதல் மீண்டும் சுறுசுறுப்பாக வலம் வருகிறார். நடிகர் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்ம சீனுராமசாமியின் கண்ணே கலைமானே படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரபுதேவாவுடன் தேவி-2, விஷாலுடன் ஒரு படம் என மூன்று படங்களில் நடிக்கிறார். அதேப்போல், தெலுங்கில் குயின் ரீமேக்கில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக சிரஞ்சீவியின் சைரா, எப்-2, ஜூனியர் என்டிஆருடன் ஒரு படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் புதுப்படங்களில் நடிக்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தில், முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பதை நிபந்தனையாகவும், கொள்கையாகவும் கடைபிடித்து வருகிறார். இதுகுறித்து கேள்விக்கு பதில் கூறியுள்ள தமன்னா,  ‘‘தனக்கு முத்தக் காட்சிகளில் நடிப்பது பிடிக்காது என்றவர்,  ஆனால் ஹிரித்திக் ரோஷனுடன் நடித்தால் மட்டுமே  முத்தக் காட்சிகளில் நடிக்க தயார் என்று  தெரிவித்து உள்ளார்.